புதிய ஏவுகணை சோதனை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை செங்குத்தாக சென்று அழிக்கும் குறுகிய தூர VL-SRSAM ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது. ஒடிசா கடற்கரையில் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் (ஐ.டி.ஆர்) இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு வாழ்த்தினை தெரிவித்தார். தற்போது நம் பாரத அரசு சுயசார்பு பாரதம் எனும் இலக்கை முன்னெடுத்துள்ளதால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றன. பல நாடுகளுக்கு நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.