நாடு தழுவிய வேலை நிறுத்தம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஹிந்துக்களுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் ரௌடிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத வன்முறைக்கு எதிராக இன்று (மே 5) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை பா.ஜ.க அறிவித்துள்ளது. கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி இந்த பந்த் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, நேற்றும் இன்றும் மேற்கு வங்கத்தில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் செல்வதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திக்கிறார். பா.ஜ.க தலைவர் ஸ்வபந்தாஸ் குப்தா, கொல்கத்தா நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.