கங்கனாவின் டிவிட்டர் முடக்கம்

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள், பா.ஜ.கவினர், ஹிந்து அமைப்பினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள மமதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கோரி, ‘அரக்கி’ மமதா என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இதனால், அடுத்த 15 நிமிடங்களில் அவரது கணக்கை டிவிட்டர் நிர்வாகம் முற்றிலுமாக முடக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த கங்கனா, எனது டிவிட்டர் கணக்கு இப்போது முக்கியமில்லை. மேற்கு வங்கத்தை கவனியுங்கள் என கூறியுள்ளார்.