பொய் செய்தி பரப்பும் பொய்யர்கள்

உத்தரபிரதேசம், உன்னாவ் பகுதியில் கடந்த பிப்ரவரி 17ல் இரண்டு பட்டியலின சிறுமிகள், உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றொருவர் ஆபத்தான நிலையில் இருந்தார். காவல்துறை 48 மணி நேரத்தில் இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது. இந்த சம்பவம் ஒரு தலை காதல் தொடர்பான பிரச்சனை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உதித்ராஜ், என்.டி.டி.வியை சேர்ந்த பர்காதத், நீலிம் தத்தா, விஜய் அம்பேத்கர், நவாப் சத்பால் தன்வார் உட்பட பலர், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, ‘அந்த இரண்டு சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டிருந்தனர், இரண்டு சடலங்களும் அவர்களின் குடும்பங்களின் அனுமதியின்றி அதிகாரிகள் எரித்துவிட்டனர்’ என்று திட்டமிட்டே பொய்யாக குற்றம் சாட்டி செய்திகளை பரப்பினர். இதனையடுத்து, உ.பி காவல்துறை இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.