அணிலாக நாம்

  1. கடந்த ஞாயிறு அன்று முழுஊரடங்கு சமயத்தில் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை புரியும் செவிலியர், ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆர்எஸ்எஸ், சேவாபாரதி தென் தமிழ்நாடு மற்றும் சுவாமி விவேகானந்தா சேவாகேந்திரம் சார்பில் காலை, மதியம், இரவு உணவு வழங்கும் தொண்டர்களின் சிறு தொண்டு.
  2. கோவையில் ஆர்எஸ்எஸ், சேவாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தா சேவாகேந்திரம் சார்பில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.
  3. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆர்எஸ்எஸ் சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றதுடன் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.