பாடம் கற்குமா காங்கிரஸ்

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரசை பொறுத்தவரை, புதுச்சேரி கைவிட்டுப் போயிருக்கிறது. அசாமை மீண்டும் மீட்க முடியவில்லை. கேரளாவில் தற்போது சந்தித்திருப்பது ஒரு வரலாற்றுத் தோல்வி. மேற்கு வங்கத்தில் கட்சி ஒன்றுமே இல்லாமல் போனது. தமிழகத்தில் கிடைத்த ஒட்டுக்கள் அனைத்தும் தி.மு.கவினுடையது. இந்த உண்மைகள் காங்கிரஸ் கரைந்து வருவதையே எடுத்துக்காட்டியுள்ளன. இனிமேலாவது வெற்று நாடகங்களும் அறிக்கைகளும் உதவாது. உண்மையான மக்கள் பணிதான் கட்சியை வளர்க்கும் என்பதை உணருமா காங்கிரஸ்?