நன்கொடையளித்த இடதுசாரி

தனது அரசியல் லாபம், விளம்பரம் காரணமாக அரசை எதிர்க்கிறேன் என்று கூறி விருதை திருப்பியளிக்கும் இடதுசாரிகள் பலர் தற்போது பெருகிவிட்டனர். அதில் ஒருவர் கவிஞரும் எழுத்தாளருமான உதய் பிரகாஷ் சிங். இவர் தனது சாகித்ய அகாடமி விருதை 2015ல் திருப்பி அனுப்பி பிரபலமடைந்தார். உதய் பிரகாஷ் தற்போது, ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் கட்டுமான நிதி திரட்டலுக்கு ரூ. 5,400 அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.  பல இடதுசாரி ஆதரவாளர்கள், முஸ்லிம் பிரிவினைவாதிகள் சமூக வலைதளங்களில் அவரை இதற்காக கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.