பள்ளிவாசல் ஆசிரியர் மீது குண்டாஸ்

ராமநாதபுரம், முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளிவாசல் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஆசிரியர் ஹபீப் முகமது. இவர், அப்பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். பெற்றோர்கள் அளித்த புகரின் அடிப்படையில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஹபீப் முகமதுவிடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர் மீது, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.