வெளியே சர்ச் உள்ளே

கன்னியாகுமரி மாவட்டம் நிதிரவிளை அடுத்த எஸ்.டி. மாங்காடு பகுதியில் மதபோதகர் லால் சைன்சிங்கின் வீட்டில், ‘பெடரல் சர்ச் ஆப் இந்தியா’ என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவ மதபோதகர் என்பதால் அந்த வீட்டிற்குள் கிறிஸ்த்துவ மதபோதனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அடிக்கடி ஆண்கள் குடித்துவிட்டு வருவது, பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதை பார்த்த அப்பகுதியினருக்கு சந்தேகம் வந்தது. மேலும், உள்ளூர் மக்களை மத போதனைக்கு அனுமதிக்கவில்லை அந்த கிறிஸ்தவ போதகர். இதனால் அப்பகுதியினருக்கு சந்தேகம் வந்துள்ளது. மத போதனை என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்கள். காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். தொடர்ந்து லால் ஷைன்சிங் மற்றும் பனங்காலையை சேர்ந்த ஷைன், மேக்கோடு ஷிபின், ஞாறான்விளை ராணி, சுகந்தி என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 19 வயது இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் 19 வயது பெண்ணைஅவரின் தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.