கெஜ்ரிவாலின் பொய்

டெல்லியில் நாட்டின் முதல் ஆசிரியர் பல்கலைக் கழகத்தை உருவாக்கப்போவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும் இந்த நிறுவனம் நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் என்றார். ஆனால், குஜராத்தில் ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பல்கலைக் கழகம் ஒன்று வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. கெஜ்ரிவால், பொய்களைப் பரப்புவதும் பிறகு பிடிபடுவதும் இது முதல் முறை அல்ல. சமீபத்தில்; மத்திய அரசின் முற்போக்கான விவசாய சட்டங்கள் குறித்தும்கூட அவர் பல பொய்களை பரப்பியுள்ளார்.