திரிபுராவில் ஜிஹாதிகள் கைது

திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காஷிம், ஹமீத் அலி மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட அன்சருல்லா பங்களா என்ற ஜிஹாதி பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள், ஸ்லீப்பர் செல்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும், உருவாக்குவதிலும் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மூவருக்கும் அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் பிடிபட்ட 11 ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த அசாம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்ற அனுமதியுடன் அசாம் அழைத்து வந்தனர்.