சிகிச்சை மையமாகும் ஈஷா பள்ளிகள்

கொரோனா சிகிச்சை மையங்களாக தங்கள் பள்ளிகளை பயன்படுத்துவதற்கு ஈஷா யோகா மையம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு சார்பில், தமிழகத்தில் நடத்தப்படும் எட்டு பள்ளிகளை இதற்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தனது டுவிட்டர் பதிவில், ‘ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை 990 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக்கொள்வதற்கு தமிழக அரசிடம் ஒப்படைக்கிறோம். இந்த சவாலில் இருந்து வெளிவர நமது சமூகம் ஒன்றிணைந்து அரசு நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும்’ என, தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, சத்குரு ஜக்கி வாசுதேவ் 11.54 கோடி ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.