மனித நேயமற்ற தன்சீலா

பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தர் ரிங்கு சர்மாவின் கொலையை மக்கள் கொண்டாடி மகிழ்வதைப் போன்று அவதூறு செய்திகளை தன்சீலா அனீஸ் என்பவர் தன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இவர் பிரபல இசைதளச் செயலியான ‘கானா’வின் ஊழியர். இவர் ஏற்கனவே ஹிந்துக் கடவுள்கள் குறித்து அவதூறுச் செய்திகளை பரப்பி வந்தவர். தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தன்சீலாவை பணி நீக்கம் செய்யுமாறு சண்டிகரின் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கெளரவ் கோயல், கானாவின் முதன்மைச் செயல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ‘இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என கானா நிர்வாகம் தெரிவித்துள்ளது.