விஷமப் பிரச்சாரம்

பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சில முஸ்லிம் அமைப்புகள் தற்போது, தமிழகத்தில் மார்வாடி சமூகத்திற்கும், வட இந்தியர்களுக்கும் எதிராக வெறுப்புப் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன. பழனி பாபா என்ற அகமது அலியின் சீடரான கே.எம். ஷரீஃப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் சிலர், ‘மார்வாடிக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி தங்கள் சொந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்’ என்று துண்டுப்பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். இதற்காக பிப்ரவரி 8ல் திருச்சியில் கடையடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பி, வன்முறையை ஆதரிக்கும் தமிழ் மக்கள் ஜனநாயகக் கட்சி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.