ராகுலுக்கு தேஜஸ்வி வைத்த செக்

விவசாய சட்டத்தை குறித்து ராகுல் குறை கூறி நாடாளுமன்றத்தில் பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய தேஜஸ்வி சூர்யா, “அமேத்தியில் வெற்றிபெற முடியாத ராகுல், கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிட வாய்ப்பு தேடியதுபோல, அமேத்தி விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றால் கேராளாவிலோ அல்லது வேறெங்கோ விற்க வாய்ப்பு தேடுவதை ஏன் தடுக்கிறார்? விவசாயிகளுக்கு வாய்ப்பு கொடுப்பது விவசாய விரோதம் கிடையாது” என பதில் அளித்துள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் கொரோனா தடுப்பு மருந்து குறித்த தி.மு.கவின் தயாநிதி மாறனின் கேள்விக்கு, நெத்தியடியாக பதில் கொடுத்து மாறனை நெளிய வைத்தவர் இதே தேஜஸ்வி சூர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.