ஹிந்து கோயில் மீது தாக்குதல்

உத்தரகாண்ட், துவாராஹத் பகுதியில் அமைந்துள்ள 800 வருடம் பழமையான சிவன் கோயில் ஒன்று தாக்கப்பட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை அன்று மிருத்தியுஞ்சய் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பைரவர் சன்னதிக்கு மக்கள் வழிபடச் சென்றிருந்த போது அங்குள்ள சிவலிங்கம் தாக்கி உடைக்கப்பட்டுத் திருடப்பட்டிருந்தது. பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த திருட்டில் மூன்று நபர்கள் சேர்ந்து இதில் ஈடுபட்டுள்ளனர் என சி.சி.டி.வி பதிவு காட்டியுள்ளது. சமீபகாலமாக பல ஹிந்து கோயில்கள், விக்கிரகங்கள் தாக்கப்பட்டு வருகிறது, மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.