என்.ஐ.ஏ வழக்குப் பதிவு

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பஞ்சாப் துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிலர் தேசியக் கொடியை கிழித்து இழிவுபடுத்தி காலிஸ்தான் கொடியை ஏற்றினர். காவல்துறை விசாரணையில், இந்தர்ஜித்  சிங், ஜஸ்பல் சிங், ஆகாஷ்தீப் சிங், ஜக்விந்தர் சிங், குர்பத்வான்ட் சிங் பன்னுன், ஹார்ப்ரீத் சிங் ராணா ஆகியோர் இதில் ஈடுபட்டனர் என்பதும், அவர்கள் எஸ்.எப்.ஜே அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அந்த சம்பவத்தைப் பதிவு செய்து யூ-டூப், அமெரிக்க ஊடகங்கள் போன்றவற்றில் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.