போட்டுடைத்த ரஷ்யா

பாரதத்தின் லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறிய போது, நம் பாரத ராணுவம் கொடுத்த பதிலடியில், 45க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை சீனா மறுத்துவந்தது. இந்நிலையில், அந்த மோதலில், 45க்கும் அதிகமான சீன வீரர்கள் இறந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ‘டாஸ்’ தெரிவித்துள்ளது. பாரத எல்லையை காக்க நம் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்தனர்.