இந்து முன்னணியினர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பிறகு விஷம் வைத்து கொன்றுள்ளார் நாகூர் அனிபா என்ற முஸ்லிம் இளைஞர். அவரையும் இந்த சதியில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உள்ளிட்ட சிலரையும் காவல்துறை கைது செய்துள்ளது. லவ்ஜிஹாத் காரணமாக உயிரிழந்த அந்த சிறுமியின் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்த காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. இதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கவும் அதற்கு காரணமான அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.