சென்னை மேயர் பட்டியலினத்தவரா?

பாரதத்திலேயே முதல் முறையாக சென்னை மேயராக ஆர். பிரியா ஒரு பட்டியலினத்து பெண்ணை தி.மு.க அமர வைத்தது என தி.மு.கவின் சார்பு ஊடகங்கள் ஒரு பொய்யான புகழ்பாடி வருகின்றன. தி.மு,கவின் சென்னை மேயர் ஒரு கிறிஸ்தவர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதற்கேற்ப, அவர் கிறிஸ்தவ பேராயர் எஸ்ரா சற்குணத்துடன் உள்ள புகைப்படம் அன்றே சமூக ஊடகங்களில் வெளியானது. தற்போது அவரின் திருமணப் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் கிறிஸ்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சட்டப்படி, பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் மதம் மாறிய பிறகு அவரின் பட்டியலின தகுதி போய்விடும். மதம் மாறிய பிறகு அதற்கான சலுகைகளை அவர் அனுபவிப்பது சட்ட விரோதம். அப்படி இருக்கையில் பிரியா பட்டியலினத்தவர் என்ற சலுகையை அனுபவித்து வருவது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையெனில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அவரின் பதவியை பறிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துப் பகிர்வு செய்து வருகின்றனர்.