நாகா சாதுவை தாக்கிய காவலர்கள்

ஜூனா அகாடாவைச் சேர்ந்த ஒரு நாகா சாது சுவாமி கங்காபுரி. இவர் திருவனந்தபுரத்திலிருந்து பிலாஸ்பூருக்கு சக நாக சாதுவான சம்பு மகாராஜை சந்திக்க சென்றார். அதற்கு முன் அவர் குளிக்க சென்றபோது, அங்கு வந்த இரண்டு காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை டோர்வா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு அவரைக் கொடூரமாகத் தாக்கி, அவரது  உடமைகள், 1.25 லட்ச ரூபாய் பணம், அலைபேசிகளை பிடுங்கிக்கொண்டு அவரை அடித்து விரட்டியுள்ளனர். அவரை பிரமோத் நாகாய் என்ற ஒரு ரயில்வே அதிகாரி காப்பாற்றினார். காயங்களுக்கு மருந்து இட்டு  ஆசிரமத்தில் கொண்டு சேர்த்தார். விஷயம் அறிந்து வந்த பஜ்ரங்தள் உறுப்பினர்கள், பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் நீதி கோரியுள்ளனர். காவலர்கள் அலைபேசியை கொடுத்தார்களே ஒழிய பணத்தை நேற்றுவரை ஒப்படைக்கவில்லை.