கொடூர காலிஸ்தானிகள்

பஞ்சாப்பில், காவல்துறையினர் கண் எதிரிலேயே, பஞ்சாப்பை சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான அருண் நாரங், காலிஸ்தானிய ஆதரவாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை அன்று, அவர் பா.ஜ.க அலுவலகம் வரும் வழியில் காரின் மீது மை ஊற்றி தடுத்து நிறுத்தி தாக்கப்பட்டார். பின்னர் காவலர்களும் கட்சி உறுப்பினர்களும் வந்து அவரை காப்பாற்றினர். விவசாய சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாய கமிஷன் ஏஜெண்டுகளும் அவர்களுக்கு துணையாக உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளும்தான் இதற்கு காரணம். இந்த பிரச்சனையில் உண்மையான விவசாயிகள் யாரும் பங்கேற்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.