ஐந்து புதிய தடுப்பூசிகள்

பாரதத்தில் கொரோனாவை தடுக்க தற்போது, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவின், ஸ்புட்னிக் – வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்’ ஆகிய ஐந்து தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.