சபரிமலையில் ஆரிப் முகமதுகான்

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், தன் மகன் கபீருடன் விரதமிருந்து தலையில் இருமுடி ஏந்தி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு அதிகாரிகள் சபரிமலையில் அவரை வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்ற அவர், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்தார். அவருக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரசாதம் வழங்கினார். பின், மாளிகைப்புறம் கோயில் அருகே, சந்தன மரக்கன்றுகளை நட்டு, திருவனந்தபுரம் திரும்பினார். வி.ஜ.பி தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.