விவசாய சட்டத்திற்கு ஆதரவு

‘இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் நடக்கிறது’ என, பாலிவுட் பிரபலங்கள், அக் ஷய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, கரன் ஜோகர்ந்  நடிகை சாயானி குப்தா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.  ‘பாரதத்தின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; பங்கேற்க முடியாது. பாரதத்தில் உள்ளவர்களுக்கே பாரதத்தைப் பற்றி தெரியும். பாரதத்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்’ என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, அனில் கும்ளே உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.