வெளிவரும் பூற்றீசல்கள்

கமிஷன் ஏஜெண்டுகள், பயங்கரவாதிகள், எதிர்கட்சிகள், பிரிவினைவாதிகள் ஒன்றிணைந்து நடத்தும் விவசாய போராட்டத்தை பயன்படுத்தி தேசத்தில் குழப்பத்தை விளைவிக்க பல வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்கள், சில உள்நாட்டு வெளிநாட்டு பிரபலங்களை சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இதற்கு பயன்படுத்துகின்றனர். அமெரிக்க துணை அதிபரான,கமலா ஹாரிசின் தங்கை மகள் மீனா ஹாரிஸ், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, அமந்தா செர்னி,  சுவீடனை சேர்ந்த கிரேட்டா தன்பர்க், உகாண்டாவின் வெனஸ்ஸா, பாரதம் மணிப்பூரை சேர்ந்த லிசிபிரியா போன்றவர்கள் இதில் அடங்குவர். இதற்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.