முதல்வரின் பி.எப்.ஐ.பாசம்

தடை செய்யப்பட்ட சிமி பயங்கரவாத அமைப்பினர் ஆரம்பித்ததுதான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு. இந்த அமைப்பும்  மறைமுகமாக பயங்கரவாத ஆதரவு அமைப்பாகவே செயல்படுகிறது. ஹிந்து தலைவர்களை குறிவைத்தல், வகுப்புவாத பிரிவினையை தூண்டுதல், லவ்ஜிகாத் போன்ற கட்டாய மதமாற்றத்திற்கு உறுதுணை, ஐ.எஸ்.ஐ.ஏ பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம்களை இணைய மூளைச்சலவை செய்தல் போன்றவை இவர்களின் மறைமுக செயல்பாடுகள் என்பதை உளவு அமைப்புகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.  இது  தெரிந்திருந்தும், கடந்த மாதம் அவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. அதில், கொரோனா காலத்தில் பி.எப்.ஐயின் செயல்பாடுகளை பராட்டினார்.  உணர்ச்சி வசப்பட்டு சுனாமி காலத்திலும் பி.எப்.ஐ அமைப்பு நன்றாக செயல்பட்டதாக கூறினர் நராயணசாமி.  சுனாமி ஏற்பட்ட காலத்தில் பி.எப்.ஐ ஆரம்பிக்கப்படவேயில்லை எனபது குறிப்பிடத்தக்கது.