போலி செய்திகள்

பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மகாலட்சுமி என்ற ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர். அவர், தற்போது பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள, ‘விவசாயம் மற்றும் விவசாய நலன்’ குறித்த தேர்தல் அறிக்கையை, எடிட் செய்து மாற்றி, ‘தமிழ்நாடு’, ‘தக்ஷிண பிரதேஷ்’ என பெயர் மாற்றம் செய்யப்படும்’ என்று பா.ஜ.க குறிப்பிட்டுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் பொய்யான செய்தி ஒன்றை திட்டமிட்டே பதிவிட்டுள்ளார். இதேபோல, ‘தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பா.ஜ.க ஆட்சிக்கு வரவில்லை’ என ஹெச். ராஜா கூறியதாக ஒரு போலி செய்தியை, தமிழக காங்கிரஸ் அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தது. ஓட்டுக்காக, மக்களிடம் தவறான தகவலை கொண்டு சேர்க்கும் நோக்கில் தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.