தப்பிய ஹிந்து குடும்பம்

டெல்லியில் ரிங்கு சர்மாவின் கொடூர கொலை போன்ற மற்றொரு சம்பவம் மும்பையில் முஸ்லீம்கள் ஆதிக்கமுள்ள மால்வாணியில் நடந்துள்ளது. மால்காணியில் வழிப்போக்கர்களை தவறாக விமர்சித்துள்ளது அப்பகுதியை சேர்ந்த ஒரு 15-20 நபர்கள் கொண்ட ஒரு முஸ்லீம் கும்பல். இப்படி செய்ய வேண்டாம் என்று ஒரு ஹிந்து இளைஞர் கூறியுள்ளார். அதனையடுத்து அந்த கும்பல், மிரட்டியதுடன் அவரையும் அவர் குடும்பத்தையும் கொலை செய்யும் நோக்கோடு அவரின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. ஆனால், அவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. அப்போது, அங்கு வந்த உள்ளூர்வாசிகள் தலையீட்டால் இச்சம்பவம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர், சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளிக்கையில், காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்துள்ளனர். ‘இது, இரு நண்பர்களுக்கு இடையேயான சிறிய பிரச்சனை’ என்று கொலை முயற்சி சம்பவத்தை தட்டிக்கழித்துள்ளனர். பின்னர், பா.ஜ.க தலைவர் மங்கள் பிரபாத் லோதா எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, காவல்துறை கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்தது.