7.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. வாகன தொழில்நுட்ப பொருட்களை பாரதத்தில் உற்பத்தி செய்வதில் உள்ள செலவு சார்ந்த குறைபாடுகளை களைவதை நோக்கமாகக் கொண்டு, இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முன்னேறிய வாகன தொழில்நுட்ப பொருட்களுக்கான புதிய முதலீடுகளை செய்யவும் சர்வதேச வாகன தொழிலில் பாரதத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் இது உதவும். இதனால், அடுத்த ஐந்து வருடங்களில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாகும். ரூ. 42,500 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் கிடைக்கும். ரூ. 2.3 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தி நடைபெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.