பொருளாதாரம் வேலைவாய்ப்பு பெருகும்

செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ. 1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டது. இதுகுறித்து குஜராத் முதலல்வர் பூபேந்தர் படேல் பகிர்ந்துள்ள டுவிட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி, “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர்கள் உற்பத்தி நோக்கத்தை விரைவுபடுத்துவதில் முக்கியமான ஒன்றாகும். ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு என்பது  பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும். துணைத் தொழில்கள் உருவாக உதவி செய்வதோடு  எம்.எஸ்.எம்.இ’க்களுக்கும் உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.