வேளாண்துறைக்கு ட்ரோன்

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய பகுதிகளில் விளைச்சல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம், வேளாண் அமைச்சகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லும். உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி, சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும், ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு, 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் போன்ற 19 வழிகாட்டுதல்களும் வெளியிட்டுள்ளது.