கொரோனா பதற்றம் வேண்டாம்

சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கொரோனாவை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயாராக உள்ளன. தொற்று அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகள் நிரம்பின. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே படுக்கைகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவரால் 10 பேர் பாதிக்கப்படுவார்கள். பொது இடங்களுக்கு செல்லும் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தமிழகத்தில் கொரோனாவினால் இறப்பவர்களின் சதவிகிதம் குறைவாக உள்ளது’ என தெரிவித்தார்.