தி.மு.கவினர் அபகரித்த நிலம்

நாகப்பட்டினம், கீழையூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், வசந்தி என்ற பெண்ணிடம் இருந்து நிலத்தை அபகரித்துள்ளார். வேளாங்கன்னி, பூக்காரத் தெருவில் அமைந்துள்ள புல எண்: 4/6ல் உள்ள 365 சென்டில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீடுத்தரக்கோரி, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமே அப்பெண் மனு அளித்துள்ளார். முன்னதாக ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போராரு’ என்ற நிகழ்ச்சியிலும் அப்பெண் இதே கோரிக்கையை ஸ்டாலினிடம் வைத்துள்ளார் என்பதும் அதன்மீது இன்று வரை ஸ்டாலின் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கே நடவடிக்கையும் எடுக்காத ஸ்டாலின் எப்படி 100 நாட்களில் மக்கள் பிரச்சனையை தீர்ப்பார் என நெட்டிசன்கள் வலைத்தளங்களில் கிண்டலடிக்கின்றனர்.