கொரோனா தடுப்பூசி பிரதமர் அறிவுரை

கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை கடந்த மார்ச் 1ல் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்ட பிரதமர் மோடி, நேற்று தனது 2வது டோஸ் தடுப்பூசியை அதே எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன். வைரசை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும், https://www.cowin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்து, விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.