கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) ஆயுதப் படைகளுக்கான 12 நாள் கூட்டுப் போர் பயிற்சி ரஷ்யாவில் நடைபெற்றது. அது வெற்றிகரமாக நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் பாரத முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் இதனை பார்வையிட்டார். 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற அவர், எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளிடையே உள்ள நெருங்கிய உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்தார். ரஷ்ய ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் வலேரி ஜெராசிமோவை சந்தித்து, ரஷ்ய கூட்டமைப்பு, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விவாதித்தார். எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவை வளர்ப்பது, பன்னாட்டு ராணுவக் குழுத் தலைவர்களின் திறன்களை மேம்படுத்துவது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை போன்றவற்றை மேம்படுத்த ஆறாவது முறையாக இக்கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.