நச்சை கக்கும் சிதம்பரம்

பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா, ‘தமிழ்நாட்டில் பெரியாரிசத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம்’ என்று கூறியதாகத் தெரிகிறது. இதற்கு ஒரு செய்தித்தாள் கிளிப்பிங்கைத் தவிர வேறு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது திராவிட சித்தாந்திகள் மற்றும் பெரியரிஸ்டுகளால் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படுகிறது. தேஜஸ்வி கூறியதாக சொல்லப்படும் இந்த கருத்தை எதிர்த்து, ​​முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ‘பெரியார் சனாதன தர்மம் என்ற நச்சு சித்தாந்தத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றார், தமிழர்களின் கண்ணியத்தையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுத்தார்’ என்றும் டிவிட் செய்துள்ளார். ஹிந்து பயங்கரவாதம் என்ற வார்த்தையை உருவாக்கிய ப. சிதம்பரம், அதற்காக மாலேகான் குண்டுவெடிப்பை பயன்படுத்திக்கொண்டார். ஹிந்து பயங்கரவாதம் இருப்பதை நிரூபிப்பதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அப்பாவிகளான துறவியன சாத்வி பிரக்யா மற்றும் ராணுவ வீரரான லெப்டினன்ட் கர்னல் எஸ்.பி. புரோஹித் ஆகியோரை இதில் சம்பந்தப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்து கொடுமை செய்தவர் என்பதும் அவர்கள் பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.