கேம்ப்ரீயன் போட்டியில் வெற்றி

இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டு ராணுவம் உலகின் மிக கடினமான ரோந்து போட்டியை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் ராணுவத்தினர் கலந்து கொள்வார்கள். கேம்ப்ரீயன் மலை, வேல்ஸ் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலப்பரப்பில் நடைபெறும் இந்த போட்டியில் 48 மணி நேரத்தில் 65 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும். முதலாவதாக வரும் அணிக்கு தங்க பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாரதம் சார்பாக பங்கேற்ற 4வது கூர்க்கா ரெஜிமென்ட்டின் 5வது பட்டாலியன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.