பதவி ஏற்புவிழாவிற்கு முன்பே

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பே அவரது கட்சியை சேர்ந்த உடன் பிறப்புகள், சென்னை ஜே.ஜே நகரில் உள்ள ‘அம்மா’ உணவகத்தை அடித்து, உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருத்த பலகை, கூரை ஆகியவற்றை நொறுக்கியுள்ளனர் தி.மு.க’வினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் தங்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.கவினரில் 2 பேர் மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவக பெயர்ப்பலகையை அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மா சுப்பிரமணியன் எம்.எ.ல்ஏ தகவல் தெரிவித்துள்ளார்.