பயணிகளை மீட்ட ராணுவம்

பாரத ராணுவத் தரைப்படை வீரர்கள் கடந்த 25ம் தேதியன்று சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் நாதுலா பகுதியில், கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கி கொண்ட 1,027 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களுக்கு உணவு, குளிர் தாங்கும் உறைவிடம், உடை, மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் வழங்கினர்.