மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஆ.ராசா

தி.க. தலைவர் வீரமணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்” என பேசினார். இதற்கு பொதுமக்கள், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை ‘தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசா மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பேசியுள்ளார். ‘தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என கூறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன், ‘ஹிந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராசா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழச்சிக்கு முக்கிய காரணம். ‘மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராசாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார். அரசியல் சாசனத்தை அவமதிக்கும் வகையில், ஒரு மதத்தினரை மட்டும் குறிவைத்து தாக்கி அநாகரீகமாக ஆ.ராசாவின் பேசும் சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.