ஹிந்து விரோத கழகங்கள்

சி ல தினங்களுக்கு முன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு சென்றார் திமுகவின் உதயநிதி ஸ்டாலின். அவரை வரவேற்க கயிலாசநாதர் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட பரிவட்டம், பூரணகும்ப மரியாதையை ஏற்க மறுத்துள்ளார்.

அதே நாளில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், குறிக்கப்பட்ட நல்ல நேரத்தை தாண்டி வழக்கம்போல தாமதமாக வந்தார் அமைச்சர். நல்ல நேரம் முடிவதால் கொடியேற்றப்பட்டது.  இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் கோயில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை நிர்வாகிகளை மிரட்டியுள்ளார்.