ஹிந்து மதம் முற்போக்கு மதம்தான் மாற்றத்தை சொல்ல வேண்டியவர்கள் மடாதிபதிகளே!

ஹிந்து மதம், கோயில் திருவிழா, சாமிவழிபாடு, ஹிந்துப் பண்டிகைகள், நம்பிக்கைகள் என்றால் திராவிடக் கழகக் குட்டிப் பிசாசுகள், தமிழ்ப்போர்வை போர்த்திய சருமநோய் பாக்டீரியாக்கள். இவர்களுடன் இரவுநேர டான்ஸ் ஆடும் CPM, – VCK – காபரேக் கன்னிகளுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.

இந்த கொண்டாட்டம் ஒருவாரம் தான். சிலநேரம் இவர்கள் ஆரம்பித்த நேரம் நல்ல நேரமாக இருந்தால் 15 நாள் வரை தொடரலாம். 15 நாட்கள் இவர்கள் காட்டில் மழைதான். இந்த லெட்டர் பேட் குழுக்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் பெரும் விளம்பரம் தான். இப்போது இவர்களுக்கு ‘திருவிழா’ உற்சாகம் தந்தது ”தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு” பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிற தகவல் தான். எப்போதும் ரவுடிகளுக்கு ”மாமூல் வசூல்”, திருவிழா பண்டிகை நாட்களில் தான். இந்த மாமூல் கலெக் ஷனை நமது மத எதிர்ப்பு ரவுடிகளும் ”தொழில் ரீதியாக” Professional ஆக செய்வார்கள்! அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தமோ அதுதான் இவர்களுக்கும் கோயில்களுக்கும் உள்ள சம்பந்தம் என்பது நமக்குத் தெரியும். அதனால் முகத்தை மூடிக்கொள்ள ஒரு ”மீட்புக்குழு.” அதன் தலைவர்,    உலகறிந்த ஹிந்து விரோத தலைவர் பெ.மணியரசன். இப்போது விஷயம் சாமி பற்றியதல்ல. சடங்கு பற்றியது. குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டுமாம். அம்மாவே ஆகாது என்கிற வனுக்கு அம்மா தலையை இப்படித்தான் சீவிக்கொள்ளவேண்டும் என்று சொல்வது ஏற்க முடிந்த கூற்றா?

தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கூக்குரல் மீடியாக்கள் மூலம் மிகப்பெரிய குரலாக இப்போது உயர்த் திக் காட்டப்படுகிறது. தமிழகத் தில் வேலைவெட்டி இல்லாத ”மிகவும் சுறு சுறுப்பான” அரசியல் வாதிகள் எல்லாம் களத்தில் இறங்கி உள்ளனர். பெரிய பெரிய  அறிஞர்களை விஞ்சும் கருத்துக்களை சொல்லி உள்ளனர். மாட்சிமை தங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், மேன்மைமிக்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேதகு CPI, CPM, VCK, சீமான் எல்லாம் தமிழ் குடமுழுக்கு தான் நடத்த வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவர்களுடைய தமிழ்ப்பற்று எல்லை கடந்து ஓடுவது சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷம் ஹிந்து மத எல்லையைத் தாண்டுமா என்றால் நிச்சயம் தாண்டாது. எப்போதுமே தாண்டியதில்லை. இவர்கள் ஹிந்துமத ‘‘படிதாண்டா பத்தினிகள்!’’ இஸ்லாம், கிறிஸ்தவ வழி பாட்டு முறைகள், மத சம்பிரதாயங்களுக்குள் தலையீடக் கூடாது என்கிற விரதம் மேற்கண்டவர்கள். அதற்கு எதிரான ஒரு சிறிய கருத்து சொன்னாலும் ”மயிர் நீப்பின் வாழா கவரி
மான் போல” உயிரை இழந்ததாக நினைப்பவர்கள்.

நமது வருத்தமெல்லாம் என்னவென்றால் இவர்களது தமிழ்ப்பற்றை வரவேற்பது ஒருபுறம் இருந்தாலும் இந்தத் தமிழை இஸ்லாத்தின் அரேபிய மொழிக்கும்  மாற்றாக நீட்டிக்கும் வல்லமை இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பதுதான். இவர்கள்தான் மாபெரும் வீரதீர பராக்கிரமசாலிகள் ஆயிற்றே, சூரிய கிரகணத்தின் போது வெட்டவெளியில் உட்கார்ந்து அல்வா,  இட்லி சாப்பிடுபவர்கள்  ஆயிற்றே என்றால்,     இந்த தமிழ் ”தாதா”க்கள் தங்களுடைய மாற்றுமத நண்பர்களிடம் இதை எடுத்துச் சொல்ல ஏன் பயப்படுகிறார்கள்?  ஓட்டு போய்விடுமா! நோட்டு இழப்பு ஏற்படுமா? உயிருக்கு ”வேட்டு” வைத்துவிடுவார்கள் என்றும் பயமா? எதுவாயினும் இவர்கள் ”ரவுடிகள்,” வேஷமிட்ட ”பச்சை கோழைகள்” என்பது மட்டுமே உண்மை! அது இருக்கட்டும். குடமுழுக்கு தமிழிலா -சமஸ்கிருதத்திலா? என்பதற்கு முன் இவர்களின் தமிழ்ப்பாசம் எத்தகையது என்பதை ஒரு சின்ன பிளாஷ் பேக்கில் பார்த்து விடுவோம்!

நம்முடைய தலைமுறையினருக்கு தெரிந்து 1980லும் 1997லும் தஞ்சை பிரகதீஸ்வரர் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலுக்கு குடமுழுக்குகள் நடை பெற்றிருக்கிறது. 1980ல் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம். அப்போது இதுபற்றி இந்த ”திருவிழாக்கால தாதாக்கள்” ஒரு குரலும் எழுப்பவில்லை!  அதனாலும் அவர்கள் அடங்கிப் போயிருக்கவில்லை. அப்போது ஈ.வெ.ரா மறைந்து 7 ஆண்டு கூட ஆகவில்லை. எம்.ஜி.ஆர் எதிர்ப்பில் இருந்த கருணாநிதி முழுவதும் கடவுள் மறுப்பு போராளியாகவே தன்னை காட்டிக் கொண்டார். ஆனால் இப்போது ஸ்டாலின், சுப.வீ, வீரமணி போடும் கூச்சல் அப்போது  ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை. 1997ல் நடந்த குடமுழுக்கும் அதாவது ”கும்பாபிஷேகம்” போராட்டங்களும் கூச்சலும் இன்றிதான் துவங்கியது. ”சுயமரியாதை இயக்க வாழும் போர் வாளாக” அன்று கலைஞர் தான் இருந்தார். அவர் ஆட்சிதான் நடைபெற்றது. அன்றைக்கு அவரின் ”பாஸ்” கருணாநிதி ஆண்டதால் கி.வீரமணியும் வாய்மூடிச் சாமியாக மெளனம் காத்தார். இப்படி காலம் காலமாக ”கும்பாபிஷேகத்தில்” மெளனம் காத்த கும்பலுக்கு இப்போது திடீர் தெய்வ பக்தி அதுவும் ”காட்டுமிராண்டி பாஷை தமிழ் மீது” ஏன் பாசம் வருகிறது? அதுவும் ‘கடவுள் இல்லை – இல்லவே இல்லை – கடவுளை கற்பித்தவன் முட்டாள் – பரப்புவன் அயோக்கியன் – வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன ஈ.வெ.ரா குடும்பத்தாருக்கு ஏன் இந்த மனமாற்றம்?

கோயில் குடமுழக்கை எந்த மொழியில் நடத்த வேண்டும் என முடிவு செய்ய வேண்டியவர்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்லும், மதம், கோயில் மீது நம்பிக்கையில்லாதவர்கள், அல்லது மத  சார்பற்ற நாடு, மதசார்பற்ற அரசு என அறிவித்துவிட்டு, ஹிந்து மதத்தின் சடங்கு, நம்பிக்கை, சம்பிரதாயங்களில் தலையிடுவது அரசியல் கட்சிகளா, ஆன்மிகப் பெரியோர்கள், சிவாச் சாரியார்கள், வைணவகுல வித்தகர்கள் மற்றும் மடாதிபதிகளா? ஆகமவிதிகளுக்குட்பட்டு செயல்படும் கோயிலில் ராஜராஜசோழன் காலத்திலிருந்து தஞ்சை பெரிய கோயில் உட்பட சமஸ்கிருதத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதை 2002 அக்டோபர் 21,22 தேதிகளில் கூடிய உலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அர்ச்சகர் ஆகம வழிபாட்டுக் குழு மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 2015ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழக்கில் ஆகமவிதிகள், கடைபிடித்து வரும் பாரம்பரியம், நடைமுறைகளை மாற்றாமல் அதற்குட்பட்ட சீர்திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. எதற்கு இவ்வளவு பேசிக்கிட்டு எழுதிகிட்டு சொல்லவந்ததை ‘நச்’ என்று சொல்லுங்கன்னு நீங்கள் கேட்பது புரிகிறது. ஹிந்துமதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு முற்போக்கு மதம். மாற்றங்களை மடாதிபதிகளும் ஆன்மிகப் பெரியோர்களும் சொல்லட்டும்! நாத்திகவாதிகள் அல்ல.