ஹிந்து அமைப்பு பிரமுகர்கள் மீது குறி வைத்த நான்கு பயங்கரவாதிகள் சிக்குவார்கள்

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, போலீஸ், செக்போஸ்ட்’களுக்கு, சம்பந்தப்பட்ட காரின் எண் குறித்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் அளிக்கப்பட்டது.ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உட்பட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, சந்தேகப்படும், நான்கு பேரின் போட்டோக்கள், செக்போஸ்ட் மற்றும் ரோந்தில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.பயங்கரவாதிகளின் பெயர்கள் காஜாமொய்தீன், அப்துல் சமீம், சையத் அலி நவாஸ், அப்துல் சமது என, தெரிய வந்துள்ளது.செக்போஸ்ட்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு, இரவு நேரத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார், வாகன தணிக்கை செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் விரைவில் சிக்குவர் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும், ‘அலர்ட்’ செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், திருப்பூரில் உள்ள, 10 செக்போஸ்ட்களில், தீவிர கண்காணிப்பு, ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் அவர்களின் போட்டோக்கள், பணியில் உள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

பத்ரிநாராயணன்
திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர்.