ஹிந்துக்கள் என்றால் இளக்காரமா?

சமீபத்தில், ஹிந்துக்களின் பண்டிகையான, பொங்கலுக்கு தரப்படும் இலவச பொருட்களை, பொங்கலே கொண்டாடாத முஸ்லிம்களுக்கு முதலில் வழங்கி தன் சிறுபான்மையினர் விஸ்வாசத்தை நிரூபித்துள்ளார் முதல்வர் எடப்பாடியார். திராவிட கட்சிகளால் ஆளப்படும் தமிழக அரசு, சிறுபான்மையினர் என்றால் மட்டும் சலுகைகளை அள்ளித்தரும். ஆனால் ஹிந்துக்களை கண்டுகொள்ளாது. துச்சமாக மதிக்கும். தி.மு.கவும் அ.தி.மு.கவும் இதில் ஒன்றுதான். உதாரணமாக அரசு செலவில் முஸ்லிம்களுக்கு, ரமலான் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி. நாகூர் தர்காவுக்கு இலவச சந்தனக்கட்டைகள். ஹஜ் பயணத்துக்கு 6 கோடி. ஹஜ் குழு நிர்வாக மானியம் 50 லட்சமாக உயர்த்துதல், மாவட்ட காஜி, உலமாக்களுக்கு ஓய்வூதியம், முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு இணை மானியம், வக்பு வாரிய நிர்வாக மானியம் 2.50 கோடி என எண்ணற்ற சலுகைகள் வழங்குகிறது. அதேபோல, கிறிஸ்தவர்களுக்கு, ஜெருசலேம் மானியம் 37,000. கிறிஸ்தவ தேவாலயங்கள் புணரமைக்க ஒரு கோடி. கிறிஸ்தவ பெண்கள் நலசங்கங்களுக்கு வெளியில் இருந்து கிடைக்கும் நிதியை போல இரண்டு மடங்கு மானியம் என கொட்டிக்கொடுக்கிறது.
ஆனால், ஹிந்துக்கள் மட்டும் வஞ்சிக்கிறது.உதாரணமாக, அரசு கோயில் பணத்தை கபளீகரம் செய்தல், அரசே செய்யும் கோயில் நில ஆக்கிரமிப்பு. கோயில் நிலங்களை இலவச பட்டா போட்டு கொடுப்பது. அறநிலையத்துறையினரின் கோயில் கொள்ளைகள், கோயில் நில ஆக்கிரமிப்பு. சிலை கடத்தல் வழக்கு விசாரிப்பில் மெத்தனம். பூஜாரிகளுக்கு சொற்ப ஊதியம். அதையும் சரியாக தருவதில்லை. கோயில் நில ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத்து. ஹிந்து பண்டிகைகளுக்கு தடை என ஆயிரமாயிரம் உதாரணங்களை இதற்கு சொல்ல முடியும்.

இவற்றை ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும். கழகங்கள் இல்லாத தமிழகம் ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு என்பதை உணர வேண்டும்.