ஹனுமனை துஷ்பிரயோகம் செய்த காலிஸ்தானி

மார்ச் 26 அன்று, டிக்டாக் பயனரான காலிஸ்தான் பிரிவினைவாதி ஒரு அறியப்படாத இடத்தில் இருந்து காலிஸ்தானி எதிர்ப்பின் வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் ஹிந்து கடவுளான ஹனுமானை இழிவாக பேசியுள்ளார். ஹனுமனை பயங்கரவாதி என்று அழைத்தார். ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவை பயங்கரவாதி என்று அழைப்பவர்களை கடுமையாக சாடினார். கனடாவைச் சேர்ந்த பிரீதம் சிங் என்ற பயனர் டுவிட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது கணக்கில் காலிஸ்தானிக்கு ஆதரவான பதிவுகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டார். வீடியோவில் அவர், “நீங்களும் உங்கள் ஊடகங்களும் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயை பயங்கரவாதி என்று அழைத்தால், அதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் ஹனுமான் தான் முதல் சர்வதேச பயங்கரவாதி. அவர் சட்டவிரோதமாக எல்லையை கடந்தார். அவர் விசா எடுக்கவில்லை அல்லது மற்றொரு நாட்டின் இறையாண்மையைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் இலங்கைக்குச் சென்றார். அவர் ஒருவருடன் தகராறு செய்தார், இலங்கையை எரித்தார். பொதுமக்களை பயமுறுத்தினார், அதை நீங்கள் இன்றுவரை லங்கா தஹன் என்ற பெயரில் கொண்டாடுகிறீர்கள். இது ராவணனுடன் அவருடைய தனிப்பட்ட தகராறு. நீங்கள் அதை (கலிஸ்தான் என்று அழைக்கப்படும்) எங்கள் தனிப்பட்ட தகராறு என்று அழைக்கும் போது, அது உங்கள் தனிப்பட்ட தகராறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை நீங்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறீர்கள்” என கூறியுள்ளார். பஞ்சாப் காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகளுக்கு  தற்போது பயந்துஓடிக்கொண்டிருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக இந்த வீடியோ வெளியிடப்பட்டதா அல்லது அது அந்த நபர் ஒரு காலிஸ்தானி பயங்கரவாதியா என்பது தெளிவாகத் தெரியவில்லை. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் (சீக் பார் ஜஸ்டிஸ்) அமைப்பின் வாக்கெடுப்பு 2020 போஸ்டர் அவரது பின்னணியில் இருந்தது.