வீரராகவ பெருமாள் கோயிலில் தரிசனம் ரத்து, பக்தர்கள் வேதனை

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை நாட்களில் தர்ப்பணம், வழிபாடுகளுக்கு அதிகளவில் மக்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி வரும் நவம்பர் 13 பிற்பகல் முதல் 14 இரவு வரை கோயில் தரிசனம் ரத்து என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் அதிகமாக வரும்போது கோயிலில் அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சமூக இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும். இதை விடுத்து இப்படி தரிசனத்தை ஒரேயடியாக நிறுத்துவது முறையா என பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.