வீரபத்திர ராமாயணக் கும்மி

ராமாவதாரத்தைத் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த மக்கள் ராமாயண கும்மி எனும் பாடல் மூலம் அவர்கள் மட்டுமே சுவைத்து  அனுபவித்தனர். இப்போது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயரிய உள்ளம் கொண்ட திருவையாறு, அரசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ச.சுபாஷ் சந்திரபோஸ் பழைய ஓலைச் சுவடிகளிலிருந்து பல மூல பாடங்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துச் சிறந்த முறையில் இரண்டு பாகங்களாக இந்த ராமாயணக் கும்மி நூலைப் பதிப்பித்துள்ளார்.