ராம்நாட்டில் தொடரும் அத்துமீறல்

ராமநாதபுரத்தில் ஹிந்துக்கள் சீண்டப்படுவதும், ஹிந்து இயக்கத்தினர் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அருண் என்ற இளைஞர் சில வாரங்களுக்கு முன் கொல்லப்பட்டது, இஸ்லாமிய தலைநகர் என கல்வெட்டு வைக்கப்பட்டது, ரகசிய பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவை இதற்கு சில உதாரணங்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் ராமநாதபுரம், அத்தியூர் அருகில் உள்ள வினாயகர் கோயிலின் பூட்டை உடைத்து அங்குள்ள சிலைகளை சில சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். இது அந்த பகுதி ஹிந்துக்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.