சம்பளம் தராத காங்கிரஸ்

லக்னோவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. அங்கு கட்டப்பணி மேற்கொண்டு வரும் வேலையாட்களுக்கும் பல நாட்களாக கூலி தரப்படவில்லை. இதனால் அந்த ஊழியர்கள் கட்சி அலுவலகத்தை இழுத்து பூட்டியுள்ளனர்.

கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட யாரையும் உள்ளே விட மறுத்துவிட்டனர். இதை தவிர அலுவலகத்துக்கான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வரிகளும் முறையாக கட்டப்படவில்லை. எனவே குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.